You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal“கரந்தையாரின் கவியமுது” எனும் தலைப்பில் என் மறைந்த தந்தையார் கவிக்குயில் கரந்தை வை. சுந்தரம் இயற்றிய தெய்வீக மற்றும் பாராட்டு கவிதைகளை தொகுத்து காணிக்கையாக இந்நாவலில் சமர்ப்பிக்கிறேன்.
உலக புகழ்பெற்ற தமிழ் மகாகவி பாரதியார் அவர்களின் உயரிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றி, என் மறைந்த தந்தையார் தமிழ் மொழி மேல் கொண்ட பற்றினால் “நாடும், மொழியும் நம்மினும் மேலாம்” மற்றும் “செவ்வாய் கோளில் சென்று தமிழ் பதிப்போம்” என்ற கொள்கைகளை அடிப்படையாக கொண்டு இயற்றிய கவிதைகள் படிப்போரின் மனதில் ஆழமாக பதிய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நாவலை வெளியிடுகின்றேன்.
மேலும் என் மறைந்த தந்தையார் தமிழ் மொழியை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆன்மீக கட்டுரை எழுதுவது, மேடை சொற்பொழிவுகள் ஆற்றுவது என அயராது உழைத்தார்.
அவர் எழுதிய ஆன்மீக கட்டுரையை இந்த பதிப்பில் இணைத்துள்ளேன். ஆன்மீக கட்டுரையில் மனித நேயம், பிறருக்கு உதவுதல், நேர்மை, உழைப்பு, மனித தர்மத்தை கடைபிடித்தல் ஆகியவற்றை மிக நேர்த்தியாகவும், பல உவமைகளோடு எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்நாவல் படிப்போர் அனைவரின் மனதிலும் என் மறைந்த தந்தையாரின் உயரிய கொள்கைகள் ஆழமாக பதிய வேண்டும் என்றும் மற்றும் தமிழை மேற்கொண்டு வளர்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சமர்ப்பிக்கின்றேன். அதுவே நாம் தமிழ் மொழிக்கு செய்யும் கைமாறு என்னும் கருத்தை இந்நாவலில் பதித்துள்ளேன்.
இந்த நாவல் என்றுமுள இன் தமிழர்களின் வாசகர் மனதில் நிற்கும் என்ற நம்பிக்கையுடன் சமர்ப்பிக்கின்றேன்.
மற்றும் இந்நாவலில் இரண்டு சிறுகதைகள் “நட்பு & பஞ்சுமிட்டாய்” இணைத்துள்ளேன்.
அனைவரும் படியுங்கள், இனிய வாழ்த்துக்கள்.
இப்படிக்கு அன்புள்ள ஆசிரியர்
சு. ரமேஷ்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
சு. ரமேஷ்
கவிக்குயில் கரந்தை வை. சுந்தரம் அவர்களின் மைந்தன் சு. ரமேஷ் அனைவருக்கும் என் அன்பான இனிய வணக்கம். நான் 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருச்சி மாவட்டம் லால்குடி டவுனில் பிறந்தேன். குடும்ப வறுமை காரணமாக 12-ம் வகுப்பு வரைதான் படிக்க இயன்றது. மேற்கொண்டு 1978 ஆம் ஆண்டு வேலை தேடி டெல்லி மாநகரத்திற்கு வந்தேன். அதிர்ஷ்டவசமாக 1979-ஆம் ஆண்டு P&T டிபார்ட்மெண்ட்டில் (இப்ப பி.எஸ்.என்.எல்) தேர்வு செய்யபட்டு பணியில் அமர்ந்தேன்.
1983 ஆம் ஆண்டு சுதா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு புதல்வர்களுக்கு (ஸ்ரீ மகேஷ், ஸ்ரீ ஸ்ரீகாந்த்) தந்தையானேன். 38 வருடங்கள் தொலைபேசி நிறுவனத்தில் அயராது பணியாற்றிவிட்டு, 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பி.எஸ்.என்.எல் என்ற நிறுவனத்திலிருந்து கணக்கு அதிகாரியாக ஓய்வு பெற்றேன்.
என் மனைவி ஸ்ரீமதி சுதா, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா இரண்டாம் அலையில் பலியானாள். அவள் மறைவுக்கு பின் நான் என்னை தமிழ் பணியில் அர்ப்பணித்துக் கொண்டேன். இந்த முயற்சியில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற செண்பக தமிழ் அரங்கின் பொறுப்பாளர் திருவாளர் இராச. இளங்கோ அவர்களின் நட்பு கிடைக்க பெற்று என்னை தமிழ் தொண்டில் இணைத்துக் கொண்டேன். எஞ்சிய வாழ்வில் தமிழை வளர்க்க தொண்டு செய்ய ஆர்வமாக உள்ளேன்.
தங்கள் அன்புள்ள ஆசிரியர்
சு. ரமேஷ்
The items in your Cart will be deleted, click ok to proceed.